{"product_id":"aurangzeb-maraikkappatta-varalaru","title":"ஔரங்கசீப் : மறைக்கப்பட்ட வரலாறு","description":"\u003cp\u003eஔரங்கசீப் அசாதாரணமான வீரம் மிகுந்தவர். நிறையப் படிப்பார். மரணத் தருவாய் வரையிலும் புத்தகங்கள் மீதான காதல் குறையவே இல்லை. அவர் எழுதிக் குவித்திருக்கும் கடிதங்களிலிருந்து பாரசீகக் கவிதைகள் மற்றும் அராபிய புனித நூல்கள் மீதான அவருடைய மேதமையும் தெளிவாகத் தெரியவருகின்றன. அரச நிர்வாக விஷயங்களில் அவருடைய உழைப்பு அபாரமானது. 90 வயதில் இறந்தார் என்றாலும் இறுதிக்காலம் வரையிலும் அனைத்துப் புலன்களும் நல்ல நிலையில் செயல்பட்டவண்ணமே இருந்தன. அவருடைய நினைவாற்றல் அபாரமானது. ஒரே ஒரு முறை பார்த்த முகத்தைக்கூட அவர் என்றைக்கும் மறக்கவே மாட்டார். ஒரே ஒரு முறை சொன்ன விஷயத்தைக்கூட நன்கு நினைவில் வைத்திருப்பார். அவரிடம் மதப்பற்றும் இருந்தது. அவருடைய மதம்மீதான பற்றாகமட்டுமே அது இருக்கவும் செய்தது. * மாபெரும் வரலாற்றாசிரியரான யதுநாத் சர்க்கார், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் குறித்து முழுமையான சித்திரத்தை இந்த நூலில் வழங்கியிருக்கிறார். இன்றும் சர்ச்சைக்குரியவராகத் திகழும் ஒரு பேரரசரின் ஆச்சரியமூட்டும் வாழ்க்கைச் சித்திரம். ஔரங்கசீப் குறித்த நம் பார்வைகளையும் அபிப்பிரயாயங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் முக்கியமான படைப்பும்கூட.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390394732847,"sku":"BK1506","price":665.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/aurangzeb-maraikkappatta-varalaru.jpg?v=1788008289","url":"https:\/\/siruvarbooks.com\/products\/aurangzeb-maraikkappatta-varalaru","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}