{"product_id":"kalangum-ninaivugal","title":"கலங்கும் நினைவுகள்","description":"\u003cp\u003eநதாஷா அப்பானாவின் இந்த நெஞ்சை உருக்கும் கதை, ஸ்டார்லிங் பறவைகளின் கூட்டத்தின் வர்ணணையுடன் தொடங்குகிறது. அவை ஒரு இரகசிய மொழியில் கிசுகிசுப்பது, அனைத்து புலம் பெயர்வுகளின் நினைவுகளையும்  எதிரொலிக்கச் செய்கிறது – குறிப்பாக, 1872இல் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிசுக்குப் புறப்பட்ட அவரது முன்னோர்களின் புலம் பெயர்தலை நினைவூட்டுகிறது.\u003cbr\u003e\nஇந்த மனதைத் தொடும் தொடக்கத்திலிருந்து, நினைவுகளின் ஆழமான  தேடல் விரிகிறது: அது ‘கூலி வர்க்கம்’ எனப்படும் கூட்டு வரலாற்றையும், நதாஷா அப்பானாவின் சொந்தக் குடும்பத்தின் அந்த கதைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இந்தப் புத்தகத்தின் மையத்தில், அவரது தாத்தாவிற்குச் செலுத்தப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி ஒன்று உள்ளது; அவரது வலிமையும் அமைதியான கண்ணியமும் ஒவ்வொரு பக்கத்தையும் ஒளிரச் செய்கின்றன. அவரது தந்தையைப் போலவே, அவரும் கரும்புத் தோட்டங்களில் உழைத்தார்; இந்து மரபுகளைப் போற்றிய அதே வேளையில், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மொரிஷியன் என்ற தனது அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390205890863,"sku":"BK1861","price":180.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kalangum-ninaivugal.jpg?v=1788006918","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kalangum-ninaivugal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}