சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று ஆசிரியர் குமரகுருபரர் 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர் முருகன் அருள் பெற்றவுடன் பாடிய நூல் கந்தர் கலிவெண்பா. முருகப் பெருமானால் “குருபரன்” என்று அழைக்கப் பெற்றவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளை கற்றவர். தமிழையும், தெய்வத்தையும் இரு கண்களாக கருதியவர் குமரகுருபரர் காசியில் இறைவனடி சேர்ந்தார் புள்ளிருக்கு வேளூரில் உள்ள முருகனின் பெயர் முத்துக்குமாரன். அவர் மீது பாடப்பட்டது. ஆதலால் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப்பெயர் பெற்றது. மாசிலாமணி தேசிகரிம் மெய்ப்பொருள் பெறவந்த குமரகுருபரர் தில்லை செல்லும் வழியில் புள்ளிருக்கு வேளூரில் தங்கியபோது, முருகன் தன்னைப் பாடப்பணித்த போது பாடியது. இதற்கு முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாதிபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமாரதேவர் பிள்ளைத்தமிழ் என்ற பெயர்களும் வழங்கின பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.